நடிகை கௌசல்யா ஒரு காலக்கட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக தமிழில் வலம் வந்தவர்.
பின்பு சன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பான மனைவி என்ற தமிழ் சீரியலில் நடித்தார்.பின்பு சில நாட்கள் திரைப்படங்கள்,சீரியலில் தோன்றாமல் இருந்தார்.
தற்போது பிரபல நடிகை கௌசல்யா தமிழ் சீரியல் சுந்தரியில் முக்கிய கதாபாத்திரத்தில் அதிரடியாக என்ரி கொடுத்துள்ளார்.
சுந்தரி தொடரில் கலெக்டராக நினைக்கும் நாயகிக்கு கலெக்டராக பயிற்சி அளிக்கும் பயிற்சி அதிகாரியாக கௌசல்யா நடிக்கின்றார். சுந்தரி தொடரின் இரசிகர்கள் மட்டும் இன்றி, கௌசல்யாவின் இரசிகர்களும் குறித்த சீரியலில் விறுவிறுப்பாக நடக்க போகும் காட்சிகளை காண இரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
கௌசல்யாவின் வருகை சீரியலின் கதைக்கும், திரைக்கதைக்கும் பெரிய ஒரு மாற்றத்தினை கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.