• May 18 2024

குருந்தூர்மலை அட்டூழியம்: சர்வதேச சமூகம் உடன் எதிர்வினையாற்ற வேண்டும்! - சம்பந்தன் வலியுறுத்து samugammedia

Chithra / Jul 17th 2023, 5:10 pm
image

Advertisement

"இலங்கையில் தமிழ் மக்களுடைய நிலைமை தற்போது எப்படி இருக்கின்றது என்பதைச சர்வதேசத்துக்கு குருந்தூர்மலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேசம் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்; உடன் எதிர்வினையாற்ற வேண்டும்."- இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.

குருந்தூர்மலைச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:–

"குருந்தூர்மலைக்கு நீதிமன்றத்தின் அனுமதியுடன் பொங்கலுக்குச் சென்ற தமிழ் மக்கள் மீது பிக்குகள் தலைமையிலான சிங்களவர்களும், பொலிஸ் படைகளும் அட்டூழியம் புரிந்துள்ளனர்.

இந்தக் குழுவினர் தமிழ் மக்களைப் பொங்கல் செய்யவிடாது திருப்பியனுப்பியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

நீதிமன்றத்தின் அனுமதி இருந்தாலோ - இல்லாவிட்டாலோ எங்களுடைய சொந்தச் சமயத்தைப் பின்பற்றுவதற்கு - சமயத்தலங்களை வழிபடுவதற்குச் சுதந்திரம் உண்டு. 

அந்தச் சுதந்திரத்தைப் பொலிஸ் படைகளும், பிக்குகளும் தடுக்கலாம் என்ற நிலை இருந்தால் இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக - கௌரவமாக வாழ்வதற்கு இடமில்லை என்பதை இது வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றது.

தமிழ் மக்கள் மீதான இந்த அட்டூழியத்தை - அராஜகத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும், அரசும், அமைச்சரவையும், பொலிஸ்மா அதிபரும் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்." - என்றார்.

குருந்தூர்மலை அட்டூழியம்: சர்வதேச சமூகம் உடன் எதிர்வினையாற்ற வேண்டும் - சம்பந்தன் வலியுறுத்து samugammedia "இலங்கையில் தமிழ் மக்களுடைய நிலைமை தற்போது எப்படி இருக்கின்றது என்பதைச சர்வதேசத்துக்கு குருந்தூர்மலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேசம் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்; உடன் எதிர்வினையாற்ற வேண்டும்."- இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.குருந்தூர்மலைச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:–"குருந்தூர்மலைக்கு நீதிமன்றத்தின் அனுமதியுடன் பொங்கலுக்குச் சென்ற தமிழ் மக்கள் மீது பிக்குகள் தலைமையிலான சிங்களவர்களும், பொலிஸ் படைகளும் அட்டூழியம் புரிந்துள்ளனர்.இந்தக் குழுவினர் தமிழ் மக்களைப் பொங்கல் செய்யவிடாது திருப்பியனுப்பியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.நீதிமன்றத்தின் அனுமதி இருந்தாலோ - இல்லாவிட்டாலோ எங்களுடைய சொந்தச் சமயத்தைப் பின்பற்றுவதற்கு - சமயத்தலங்களை வழிபடுவதற்குச் சுதந்திரம் உண்டு. அந்தச் சுதந்திரத்தைப் பொலிஸ் படைகளும், பிக்குகளும் தடுக்கலாம் என்ற நிலை இருந்தால் இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக - கௌரவமாக வாழ்வதற்கு இடமில்லை என்பதை இது வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றது.தமிழ் மக்கள் மீதான இந்த அட்டூழியத்தை - அராஜகத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.இது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும், அரசும், அமைச்சரவையும், பொலிஸ்மா அதிபரும் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement