• May 05 2024

'இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்'..! யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு..!samugammedia

Sharmi / Jul 15th 2023, 12:34 pm
image

Advertisement

"பிரிப்பதற்கு இடங்கொடோம்  ஒன்றாய் நாம் பறந்திடுவோம்" எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் துண்டுப் பிரசுர விநியோகமும் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது சிங்கள தமிழ் முஸ்லீம் நல்லிணக்கம் நீடுழி வாழ்க, இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், தேசிய ஒற்றுமைக்காக போராடுவோம், இனவாதத்தில் சிக்காமலிருப்போம், மீண்டும் ஒருமுறை வேண்டாம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம், தேசிய நல்லிணக்கத்தை மீண்டும் பிரிப்பதற்கு இடமளிக்க வேண்டாம், தோல்வியால் ஆட்சியாளர்களின் ஆயுதம் இனவாதம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை  தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






'இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்'. யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.samugammedia "பிரிப்பதற்கு இடங்கொடோம்  ஒன்றாய் நாம் பறந்திடுவோம்" எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் துண்டுப் பிரசுர விநியோகமும் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன் போது சிங்கள தமிழ் முஸ்லீம் நல்லிணக்கம் நீடுழி வாழ்க, இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், தேசிய ஒற்றுமைக்காக போராடுவோம், இனவாதத்தில் சிக்காமலிருப்போம், மீண்டும் ஒருமுறை வேண்டாம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம், தேசிய நல்லிணக்கத்தை மீண்டும் பிரிப்பதற்கு இடமளிக்க வேண்டாம், தோல்வியால் ஆட்சியாளர்களின் ஆயுதம் இனவாதம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை  தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement