யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் 75 வது நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாண வைத்தியசாலை முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையில் முன்னெடுக்கப்பட்டது.
நினைவு தின நிகழ்வில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்வில் யாழ். இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.