புத்த மதத்தினர் இன வாதத்தினை கக்குகின்ற வகைகளைத்தான் இன்று செயற்பட்டு வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் கருப்பத்தான்குளம் பகுதியில் கூடுதலாக மக்கள் இன்றைக்கும் தங்கள் காணிகளை வைத்து பராமரித்து வருகின்றார்கள். ஆனால் அருகில் இருக்கின்ற சிங்கள கிராம மக்கள் புத்தருடன் வந்து அதை ஒரு மயான காணியாக குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு தமிழ் மக்கள் இருக்கும் பகுதியிலே ஒரு மயான காணியை கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை செய்து வருகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், புத்த மதத்தினர் இனவாதத்தினை கக்குகின்ற வகைகளைத்தான் இன்று செய்து கொண்டுள்ளனர். கூடுதலாக தமிழ் பிரதேசத்திலே நிலங்களை அபகரிக்கின்ற செயற்பாட்டை தான் செய்து கொண்டு வருகின்றார்கள் எனவும் பாராளுமன்ற மத குருவிடம் தமிழ் மக்களின் நியாயமான கருத்தை வலியுறுத்தி உங்களுடைய புத்தமத குருக்களையும் இதிலே அனுசரித்து தமிழ் பேசும் மக்களிற்கு நியாயத்தை பெற்றுத்தரும் வாய்ப்பினை செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்
மேலும், அனைத்து இனத்தவர்களும் சரிசமமாக வாழக்கூடிய உரித்துடையவர்கள் என்ற முறையிலே வாழ வேண்டும் எனவும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு நொச்சிக்குளம் , புளியங்குளம் மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் முதலில் இரண்டு படுகொலைகளும் அதன் பின் மூன்று கொலைகளும் இடம் பெற்றுள்ளதாகவும் இதனால் அங்குள்ள மக்கள் தமது விவசாய நிலங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
அந்த மக்களினுடைய வாழ்க்கை முறை என்பன கேள்விக்குறியாகியுள்ளது எனவும் தனிப்பட்ட நபர்களுடைய கைகளில் துப்பாக்கி இருப்பது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அந்த மக்களுக்குரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .
தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க முயலும் பெரும்பான்மையின மக்கள். செல்வம் எம்.பி குற்றச்சாட்டு.samugammedia புத்த மதத்தினர் இன வாதத்தினை கக்குகின்ற வகைகளைத்தான் இன்று செயற்பட்டு வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,வவுனியாவில் கருப்பத்தான்குளம் பகுதியில் கூடுதலாக மக்கள் இன்றைக்கும் தங்கள் காணிகளை வைத்து பராமரித்து வருகின்றார்கள். ஆனால் அருகில் இருக்கின்ற சிங்கள கிராம மக்கள் புத்தருடன் வந்து அதை ஒரு மயான காணியாக குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு தமிழ் மக்கள் இருக்கும் பகுதியிலே ஒரு மயான காணியை கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை செய்து வருகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.மேலும், புத்த மதத்தினர் இனவாதத்தினை கக்குகின்ற வகைகளைத்தான் இன்று செய்து கொண்டுள்ளனர். கூடுதலாக தமிழ் பிரதேசத்திலே நிலங்களை அபகரிக்கின்ற செயற்பாட்டை தான் செய்து கொண்டு வருகின்றார்கள் எனவும் பாராளுமன்ற மத குருவிடம் தமிழ் மக்களின் நியாயமான கருத்தை வலியுறுத்தி உங்களுடைய புத்தமத குருக்களையும் இதிலே அனுசரித்து தமிழ் பேசும் மக்களிற்கு நியாயத்தை பெற்றுத்தரும் வாய்ப்பினை செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் மேலும், அனைத்து இனத்தவர்களும் சரிசமமாக வாழக்கூடிய உரித்துடையவர்கள் என்ற முறையிலே வாழ வேண்டும் எனவும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு நொச்சிக்குளம் , புளியங்குளம் மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் முதலில் இரண்டு படுகொலைகளும் அதன் பின் மூன்று கொலைகளும் இடம் பெற்றுள்ளதாகவும் இதனால் அங்குள்ள மக்கள் தமது விவசாய நிலங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்அந்த மக்களினுடைய வாழ்க்கை முறை என்பன கேள்விக்குறியாகியுள்ளது எனவும் தனிப்பட்ட நபர்களுடைய கைகளில் துப்பாக்கி இருப்பது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அந்த மக்களுக்குரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .