ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மயக்க மருந்து நிபுணர் இல்லாத காரணத்தினால் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இப்பிரச்சினையால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், இன்று சத்திரசிகிச்சைக்காக காலி முதல் மாத்தறை வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக வைத்தியசாலையில் சகல சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தயவு செய்து இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி உடனடியாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மயக்க மருந்து நிபுணரை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கையில் முக்கிய வைத்தியசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம். – சபையில் வெளிப்படுத்திய சஜித் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மயக்க மருந்து நிபுணர் இல்லாத காரணத்தினால் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இப்பிரச்சினையால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், இன்று சத்திரசிகிச்சைக்காக காலி முதல் மாத்தறை வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக வைத்தியசாலையில் சகல சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தயவு செய்து இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி உடனடியாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மயக்க மருந்து நிபுணரை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.