ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சீன அரசாங்கத்துடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு சீன எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
சீன எக்சிம் வங்கி ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் சீனாக்கு விஜயம். கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் ஆராய்வு.samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சீன அரசாங்கத்துடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.அதேவேளை இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு சீன எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.சீன எக்சிம் வங்கி ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.