பங்களாதேஷின் தலைநகரான டாக்கா நகரில் அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களையடுத்து பங்களாதேஷின் எதிர்க்கட்சித் தலைவர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிர் மற்றும் 540 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.
பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வார இறுதியில் ஒன்றுகூடி பிரதமர் ஷேக் ஹசீனாவின் இராஜினாமாவுக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த போராட்டங்களின் விளைவாக ஒரு பொலிஸ் அதிகாரியும் ஒரு எதிர்ப்பாளரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இக் கைதுகள் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் தேசியத் தேர்தல்களுக்கு முன்னதாக பதட்டங்கள் அதிகரித்து வருவதால், அனைத்துத் தரப்புகளும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு எதிராக போராட்டம். எதிர்க்கட்சித் தலைவர் அதிரடியாக கைது.samugammedia பங்களாதேஷின் தலைநகரான டாக்கா நகரில் அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களையடுத்து பங்களாதேஷின் எதிர்க்கட்சித் தலைவர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிர் மற்றும் 540 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வார இறுதியில் ஒன்றுகூடி பிரதமர் ஷேக் ஹசீனாவின் இராஜினாமாவுக்கு அழைப்பு விடுத்தனர்.இந்த போராட்டங்களின் விளைவாக ஒரு பொலிஸ் அதிகாரியும் ஒரு எதிர்ப்பாளரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இக் கைதுகள் இடம்பெற்றுள்ளது.அதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் தேசியத் தேர்தல்களுக்கு முன்னதாக பதட்டங்கள் அதிகரித்து வருவதால், அனைத்துத் தரப்புகளும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.