ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி பிரதான அமைப்பாளரும் மனித உரிமைகளுக்கான கிராமம் (VHR) என்ற அமைப்பின் பணிப்பாளராகிய முருகவேல் சதாசிவம் என்பவருக்கு நேற்று செவ்வாய்க் கிழமை மாலை 03:15 மணியளவில் அவரது தொலைபேசிக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவமானது முருகவேல் சதாசிவம் கொழும்பில் தங்கியுள்ள போது இடம்பெற்றதால், கொழும்பு பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.