ஐரோப்பிய நாடான இத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்துள்ளார்.
இத்தாலியின் நாபோலி நகரத்தில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளார்.
42 வயதான தினேஷ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இத்தாலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
கார் ஒன்றில் மூன்று பேர் பயணித்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகிலுள்ள தூணில் மோதி விபத்து ஏற்படடுள்ளது.
காரில் பயணித்த தினேஷ் உயிரிழந்துள்ள நிலையில், ஏனையவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.