காசாவில் தினந்தோறும் 4 மணிநேரம் தமது இராணுவ நடவடிக்கைகளை இடை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அங்குள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்கு இடமளித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காசாவில் உள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கோரியுள்ள நிலையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதேவேளை, 150 முகாம்களில் 7 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனிய ஏதிலிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் காசாவின் நிலைமை மேலும் தீவிரமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
காஸாவில் இராணுவ நடைமுறைகள் இடைநிறுத்தம்.samugammedia காசாவில் தினந்தோறும் 4 மணிநேரம் தமது இராணுவ நடவடிக்கைகளை இடை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.அங்குள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்கு இடமளித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் காசாவில் உள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கோரியுள்ள நிலையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் இதேவேளை, 150 முகாம்களில் 7 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனிய ஏதிலிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.அத்துடன் காசாவின் நிலைமை மேலும் தீவிரமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.