• May 04 2024

தமிழரசுக் கட்சியின் கரிநாள் போராட்டம் மட்டக்களப்பில்: பல்கலை மாணவர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு- சுமந்திரன் அறிவிப்பு!

Sharmi / Jan 30th 2023, 9:49 am
image

Advertisement

இலங்கையின் 75வது சுதந்திர தினம் எதிர்வரும் 4ம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் குறித்த நாளை வடக்கு கிழக்கில் கரிநாளாக அனுஸ்டிக்க பல்வேறு அமைப்புக்கள் முடிவுசெய்துள்ளன.

அந்தவகையில் லங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கரிநாள் போராட்டம் மட்டக்களப்பில் நடத்தப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

'இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு மட்டுமன்றி இலங்கை வாழ் மக்கள் அனைவருக்குமே இன்று இருள் நாளாகவே உள்ளது. பெப்ரவரி 4ம் திகதியை இருள் நாளாக கடைப்பிடிப்பதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்மால் ஒரு கறுப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்த அவர்  இதேவேளை யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கும் எமது முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் கரிநாள் போராட்டம் மட்டக்களப்பில்: பல்கலை மாணவர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு- சுமந்திரன் அறிவிப்பு இலங்கையின் 75வது சுதந்திர தினம் எதிர்வரும் 4ம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் குறித்த நாளை வடக்கு கிழக்கில் கரிநாளாக அனுஸ்டிக்க பல்வேறு அமைப்புக்கள் முடிவுசெய்துள்ளன.அந்தவகையில் லங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கரிநாள் போராட்டம் மட்டக்களப்பில் நடத்தப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 'இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு மட்டுமன்றி இலங்கை வாழ் மக்கள் அனைவருக்குமே இன்று இருள் நாளாகவே உள்ளது. பெப்ரவரி 4ம் திகதியை இருள் நாளாக கடைப்பிடிப்பதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்மால் ஒரு கறுப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்த அவர்  இதேவேளை யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கும் எமது முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement