• May 06 2024

சாமிமலையில் இடம்பெற்ற மோதல்...! பணிப்புறக்கணிப்பில் குதித்த உத்தியோகத்தர்கள்...!

Sharmi / Apr 5th 2024, 1:30 pm
image

Advertisement

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை மாநெலி தோட்டத்தில் தொழிலாளர் குடும்பத்தினருக்கும் தோட்ட முகாமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர், முகாமையாளர் மற்றும் தொழிலாளி பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று  சாமிமலை பகுதியில் உள்ள ஹொரன பிளான்டேசனுக்கு உரித்தான பெயர்லோன், ஓல்ட்டன், மாநெலி , கவரவிலை ஆகிய நான்கு தோட்டத்தில் பணி புரியும் உத்தியோகத்தர்கள் இன்று காலை முதல் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தருக்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட இப் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கான  உத்தியோகத்தர்கள்  ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சாமிமலையில் இடம்பெற்ற மோதல். பணிப்புறக்கணிப்பில் குதித்த உத்தியோகத்தர்கள். நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை மாநெலி தோட்டத்தில் தொழிலாளர் குடும்பத்தினருக்கும் தோட்ட முகாமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர், முகாமையாளர் மற்றும் தொழிலாளி பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து, இன்று  சாமிமலை பகுதியில் உள்ள ஹொரன பிளான்டேசனுக்கு உரித்தான பெயர்லோன், ஓல்ட்டன், மாநெலி , கவரவிலை ஆகிய நான்கு தோட்டத்தில் பணி புரியும் உத்தியோகத்தர்கள் இன்று காலை முதல் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தோட்ட முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தருக்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட இப் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கான  உத்தியோகத்தர்கள்  ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement