கனடாவில் உள்ள வேல் முருகன் கோவிலில் வெள்ளைக்காரர் ஒருவரின் செயற்பாடு அங்கிருந்தவர்கள் இடையே ஆச்சரியத்தை எற்படுத்தி உள்ளது.
மாறுபட்ட கலாச்சார மோகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்காரர் ஒருவர் இந்துமதத்தின் பெருமைகளை அறிந்து காவடி எடுத்துள்ளமை பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கனடா - மொன்றியாவில் உள்ள வேல் முருகன் கோவிலில் அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கோவில் உற்சவத்தின் தேர்த் திருவிழா தினமன்று குறித்த நபர் காவடி எடுத்துள்ளார்.
மேலும் பல தமிழர்கள் அங்கு காவடி எடுத்திருந்த நிலையில் வெள்ளைக்காரர் ஒருவர் காவடி எடுத்திருந்தமை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.