சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தொடர்பாடல் சாதனங்களுடன், மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 9 மடிக்கணினிகள், 121 ஸ்மார்ட் போன்கள், 100 சிறிய ரக சாதாரண கைத் தொலைபேசிகள் மற்றும் சார்ஜர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு 10 ஐச் சேர்ந்த 22, 27 மற்றும் 46 வயதான மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.