கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அமைந்துள்ள புனித மரியன்னை சிற்றாலயத்தின் பெருநாள் திருப்பலி இன்று காலை 9 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கலாசாலையின் கிறிஸ்தவ மன்ற ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ் மறைக்கோட்ட முதல்வரும் யாழ் பேராலய பங்குத் தந்தையுமாகிய அருட்பணி ஜே ஜே மௌலீஷ் அடிகளாரால் திருப்பலியை ஒப்புக் கொடுக்கப்பட்டது.
கோப்பாய் பங்குத்தந்தை எம் எல் மொன்பேட் அடிகள் யாழ் மறைக்கல்வி நடுவு நிலைய இயக்குனர் டபிள்யூ எக்ஸ் ஜேம்ஸ் அடிகள் ஆகியோர் பெருநாள் திருப்பலியில் கலந்து ஆசி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.