• May 04 2024

பாகிஸ்தானில் பரிதாபம்: பேரூந்து விபத்தில் 30 பேர் உயிரிழப்பு!

Sharmi / Feb 8th 2023, 3:22 pm
image

Advertisement

பாகிஸ்தானில் பேருந்து ஒன்றும் காரொன்றும்  நேருக்கு நேர் மோதியத்தில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கில்கிட்டில் இருந்து பயணிகளை ஏற்றிய  பேருந்து ராவல்பிண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்தது. கோஹிஸ்தான் மாவட்டத்தின் காரகோரம் நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்த பொழுது , எதிரே வந்த கார் மீது பலமாக மோதியது.

இதனால், பேருந்து  மற்றும் கார் ஆகிய இரண்டும் செங்குத்தாக பள்ளத்தில் விழுந்தமையினால்  இந்த கோர விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததை தொடர்ந்து  இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதுடன் , காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த துயர் சம்பவத்திற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த  தனது ஆழ்ந்த இரங்கலுடன் மன வருத்தத்தினையும்  தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தானில் பரிதாபம்: பேரூந்து விபத்தில் 30 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் பேருந்து ஒன்றும் காரொன்றும்  நேருக்கு நேர் மோதியத்தில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கில்கிட்டில் இருந்து பயணிகளை ஏற்றிய  பேருந்து ராவல்பிண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்தது. கோஹிஸ்தான் மாவட்டத்தின் காரகோரம் நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்த பொழுது , எதிரே வந்த கார் மீது பலமாக மோதியது.இதனால், பேருந்து  மற்றும் கார் ஆகிய இரண்டும் செங்குத்தாக பள்ளத்தில் விழுந்தமையினால்  இந்த கோர விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததை தொடர்ந்து  இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதுடன் , காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இந்த துயர் சம்பவத்திற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த  தனது ஆழ்ந்த இரங்கலுடன் மன வருத்தத்தினையும்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement