மாத்தளையில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடொன்றின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை ஒவில்கந்த பிரதேசத்தை சேர்ந்த 26 மற்றும் 30 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சேவையில் இருந்து நீக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.