உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி 470 நாட்களுக்கும் மேலாகியும் தீவிர தாக்குல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த இராணுவ நடவடிக்கையில் ரஷ்ய படைகளின் தாக்குதலில் உக்ரைனின் தென்கிழக்கு பகுதிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளது.
போர் தொடங்கிய நாட்களில் இருந்து நாட்கள் செல்லசெல்ல உக்ரைன் மெதுவாக எதிர்தாக்குதலை தொடங்கியது.
இதன்காரணமாக ரஷ்யப் படைகள் சில இடங்களில் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் மூன்று நகரங்களை மீண்டும் நாங்கள் கைப்பற்றியுள்ளோம் என உக்ரைன் பெருமிதம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.