தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை துப்பாக்கி முனையில் பொலிஸார் அச்சுறுத்திய போது அதனை ஒளிப்பதிவு செய்த இருவரை பொலிஸார் கைது செய்த நிலையில் அவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சி நீதிமன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர்மேலும் தெரிவிக்கையில்,
இந்த சம்பவத்தில் சட்டத்தை மீறியது பொலிஸாரே தவிர தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ அல்லது கைது செய்யப்பட்ட இரு நபர்களோ கிடையாது.
பரீட்சை ஆணையாளரால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அல்லது காவலர்களுக்கு பாடசாலை வளாகத்தினுள்ளே வெளியாட்கள் பிரவேசிப்பதை கட்டுப்படுத்தவே பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலைக்கு வெளியே உள்ள மைதானத்தில் வைத்து கஜேந்திரகுமார் மாணவர்களுடன் கதைப்பதற்கோ அல்லது கைது செய்வதற்கோ எந்த அதிகாரமும் பொலிஸாருக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.