முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட மானுருவி பகுதியில் இரண்டு விசேட தேவையுடைய பிள்ளைகளை கொண்ட நாகரத்தினம் பாஸ்கரன் என்பவரின் அரைக்கும் ஆலைக்குள் காட்டு யானை புகுந்து துவம்சம் செய்துள்ளது.
இரண்டு விசேட தேவையுடைய பிள்ளைகளை கொண்ட குறித்த குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அமைத்துக்கொடுக்கப்பட்ட அரைக்கும் ஆலைக்குள் நேற்று முன்தினம் 19.03.23 இரவு புகுந்த காட்டுயானை அரைக்கும் ஆலையின் ஒருபகுதி சுவரினை உடைத்து வீழ்ந்தியுள்ளதுடன் மா அரைக்கும் இயந்திரம் மற்றும் தூள் அரைக்கும் இயந்திரம் மற்றும் மின் இணைப்புக்களை சேதப்படுத்தியுள்ளது.
இதனால் சுமார் 5 இலட்சம் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.