• May 06 2024

கண்டி தலதா மாளிகை வளாகத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சீன பிரஜை! samugammedia

Chithra / Aug 23rd 2023, 7:29 am
image

Advertisement

கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்தில் எசல பெரஹெராவின் குபல் பெரஹராவை படம்பிடிக்க ட்ரோன் கெமராவை இயக்கிய சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சீனப் பிரஜை கண்டி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள இவர் திங்கட்கிழமை (21) இரவு 09.30 மணியளவில் தனது ஹோட்டல் அறையின் ஜன்னலில் இருந்து ட்ரோன் கெமராவை இயக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கு வந்துள்ளதுடன், கண்டிக்கு பயணித்து திங்கட்கிழமை குறித்த ஹோட்டலை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கண்டி தலதா மாளிகை வளாகத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சீன பிரஜை samugammedia கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்தில் எசல பெரஹெராவின் குபல் பெரஹராவை படம்பிடிக்க ட்ரோன் கெமராவை இயக்கிய சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சீனப் பிரஜை கண்டி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள இவர் திங்கட்கிழமை (21) இரவு 09.30 மணியளவில் தனது ஹோட்டல் அறையின் ஜன்னலில் இருந்து ட்ரோன் கெமராவை இயக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கு வந்துள்ளதுடன், கண்டிக்கு பயணித்து திங்கட்கிழமை குறித்த ஹோட்டலை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement