மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில்
வைத்து முச்சக்கர வண்டியும் -நீர்ப்பாசனத் திணைக்கள வாகனமும் மோதி
விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்து ஆபத்தான
நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர்
பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று
திங்கட்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில் தோப்பூர் -பாலத்தோப்பூர் பகுதியைச்
சேர்ந்த எம்.ஜுனைட் என்ற முச்சக்கர வண்டி சாரதியே
படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
விபத்து
இடம்பெற்ற இடத்திற்கு மூதூர் போக்குவரத்து பொலிஸார் வருகைதந்து விபத்தின்
தடயியல்களை பரிசோதனை செய்துள்ளதுடன் விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களையும்
மூதூர் பொலிஸிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.