வடக்கு கடற்றொழிலாளர்களின் கடற்றொழிலை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கடற்றொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தனியார் துறையுடன் இணைந்ததாக திட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையினை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
அதேவேளை மாகாண கடற்றொழில் சபைகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. அரச மற்றும் தனியார் துறை சார்ந்த ஒன்றிணைந்த வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.