சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தவின் பதவிக்காலம் இன்றுடன் (18) நிறைவடையவுள்ளது.
எனினும், அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காது என அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு பெரும் போட்டி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் பெயரை அந்தப் பதவிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தார்.
எவ்வாறாயினும், சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் ஊசி ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளில் அவர் பிரதான சந்தேக நபராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த அதிகாரி அரசாங்கத்தின் பலம் வாய்ந்த உறுப்பினர் ஒருவரின் சகோதரர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு நிபுணர் டொக்டர் பாலித மஹிபாலவை நியமிக்குமாறு அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று சுகாதார அமைச்சரிடம் முன்மொழிந்துள்ளதாக அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொக்டர் பாலித மஹிபால, முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக இருந்ததாகவும், அரசியல் தலையீடுகள் காரணமாக சில சமயங்களில் அவர் தனது கடமைகளை சரியாக நிறைவேற்றுவதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு டொக்டர் அனில் ஜாசிங்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
கோவிட் தொற்றுநோய்களின் போது அவர் செய்த சிறந்த சேவையின் காரணமாக பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவராக அவர் கருதப்படுகிறார்.
சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய பல தொழிற்சங்க செயற்பாட்டாளர்களினால் அவரது பெயர் சுகாதார அமைச்சருக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு அனில் ஜாசிங்க நியமனம் samugammedia சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தவின் பதவிக்காலம் இன்றுடன் (18) நிறைவடையவுள்ளது.எனினும், அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காது என அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.அதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு பெரும் போட்டி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் பெயரை அந்தப் பதவிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தார்.எவ்வாறாயினும், சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் ஊசி ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளில் அவர் பிரதான சந்தேக நபராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறித்த அதிகாரி அரசாங்கத்தின் பலம் வாய்ந்த உறுப்பினர் ஒருவரின் சகோதரர் எனத் தெரிவிக்கப்படுகிறது.சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு நிபுணர் டொக்டர் பாலித மஹிபாலவை நியமிக்குமாறு அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று சுகாதார அமைச்சரிடம் முன்மொழிந்துள்ளதாக அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.டொக்டர் பாலித மஹிபால, முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக இருந்ததாகவும், அரசியல் தலையீடுகள் காரணமாக சில சமயங்களில் அவர் தனது கடமைகளை சரியாக நிறைவேற்றுவதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு டொக்டர் அனில் ஜாசிங்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.கோவிட் தொற்றுநோய்களின் போது அவர் செய்த சிறந்த சேவையின் காரணமாக பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவராக அவர் கருதப்படுகிறார்.சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய பல தொழிற்சங்க செயற்பாட்டாளர்களினால் அவரது பெயர் சுகாதார அமைச்சருக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.