உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக இன்றையதினம்(24) காலை இலங்கைக்கு விஜயம் செய்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வரவேற்றிருந்தார்.
"அஸ்ஸலாமு அலைக்கும்" என கூறியவாறு கிழக்கு ஆளுநர் ஈரான் ஜனாதிபதியை வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று(24) காலை மத்தள சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.