ஆசியப் பிராந்தியத்தில் பொருளாதார ரீதியில் முன்னணியில் திகழும் இருபெரும் நாடுகள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பின்னர் இருவேறு விதமாக இயங்கிவருகின்றன.
அதன்படி சீனாவின் தொழிற்சாலை நடவடிக்கைகள் கடந்த மாதம் மிகவேகமான விரிவாக்கத்தைப் பதிவு செய்துள்ளன.
இருப்பினும் கடந்த இரு வருடங்களின் பின்னர் ஜப்பானின் தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் மிகவேகமான சுருக்கத்தைப் பதிவு செய்துள்ளன.
அதனடிப்படையில் நோக்குகையில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட மிகவும் வலுவான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சீனாவின் பொருளாதாரம் எதிர்பார்க்கப்பட்டதை தற்போது விடவும் சிறப்பானமுறையில் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.