உலக நாடுகள் பலவற்றில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலைமையை மறுஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஒரு சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவில் அமுலில் இருந்த கடுமையான கோவிட் -19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிகையில் கூர்மையான உயர்வைக் காண முடிகின்றது.
வரும் மாதங்களில் அங்கு கோவிட் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. மேலும், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலைமையை மறுஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஒரு சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.