• May 18 2024

மரநடுகையை மேற்கொள்ள சி.வீ.கே சிவஞானம் கோரிக்கை...!samugammedia

Anaath / Nov 1st 2023, 6:36 pm
image

Advertisement

இந்த மாதத்தினை மரநடுகை மாதமாக  பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண சபையின் விவசாயத் திணைக்களத்தின் மூலம் இச் செயற்பாட்டை இவ்வருடமும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு ஆளுநரிடமும் வடக்கு மாகாண பிரதம செயலாளரிடமும் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்  

வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,

வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன ஆகியோருக்கு

வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31.10.23)  அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே குறித்த  விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில், வடக்கு மாகாண மரநடுகை மாதமாக நவம்பர் பிரகடனம் தீர்மான இலக்கம் R16/2014/138 வடக்கு மாகாண சபையின் 25.09.2014 ஆந் திகதிய 16வது அமர்வில் ஆண்டுதோறும் வரும் நவம்பர் மாதத்தை மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்துவதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இதற்கமைய வடக்கு மாகாண சபையின் விவசாயத் திணைக்களத்தின் மூலம் இச்செயற்பாட்டை இவ்வருடமும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன்வேண்டுகிறேன் – எந அக்கடிததி குறிப்பிடப்பட்டுள்ளது.


மரநடுகையை மேற்கொள்ள சி.வீ.கே சிவஞானம் கோரிக்கை.samugammedia இந்த மாதத்தினை மரநடுகை மாதமாக  பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண சபையின் விவசாயத் திணைக்களத்தின் மூலம் இச் செயற்பாட்டை இவ்வருடமும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு ஆளுநரிடமும் வடக்கு மாகாண பிரதம செயலாளரிடமும் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்  வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன ஆகியோருக்குவடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31.10.23)  அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே குறித்த  விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அக் கடிதத்தில், வடக்கு மாகாண மரநடுகை மாதமாக நவம்பர் பிரகடனம் தீர்மான இலக்கம் R16/2014/138 வடக்கு மாகாண சபையின் 25.09.2014 ஆந் திகதிய 16வது அமர்வில் ஆண்டுதோறும் வரும் நவம்பர் மாதத்தை மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்துவதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வந்துள்ளது.இதற்கமைய வடக்கு மாகாண சபையின் விவசாயத் திணைக்களத்தின் மூலம் இச்செயற்பாட்டை இவ்வருடமும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன்வேண்டுகிறேன் – எந அக்கடிததி குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement