• May 18 2024

அரச ஊழியர்கள் சமூகத்திற்கு எதையாவது செய்யுங்கள்! யாழ்.அரச அதிபர் அட்வைஸ் samugammedia

Chithra / Jun 27th 2023, 10:58 am
image

Advertisement

அரச சேவையில் இணைந்துள்ள அரச உத்தியோகத்தர்கள் எதையாவது இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற மனப்பாங்யோடு இருக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரச அதிபர் ஆ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாண தாதியர் பயிற்சி  கல்லூரியில் இடம்பெற்ற குருதி  கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச சேவையில் இணைந்துள்ள அரச உத்தியோகத்தர்கள் எதையாவது இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற மனப்பாங்யோடு இருக்க வேண்டும்.

இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அந்த மனப்பாங்கு குருதிக்கொடை வழங்குவதிலும் காணப்பட வேண்டும்.

ஏற்கனவே நான் கடமையாற்றிய திணைக்களங்கள் மற்றும் காரியாலயங்களில் அந்தந்த நலன்புரி அமைப்புகளில் ஊடாக இரத்ததான முகாம்களை கட்டாயமாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தி அந்த நடவடிக்கைக்கு  அவர்களை உள்வாங்கும் நடவடிக்கையினை  மேற்கொண்டிருந்தேன். 

தற்பொழுது நான் அரச அதிபராக பதவி ஏற்றபின் சகல பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அந்தந்த பிரிவுகளில் இரத்ததான முகாம்களை நடாத்தி, இரத்ததான முகாம்களை செயற்படுத்த வேண்டும் என்று கோரி இருக்கின்றேன்.

இந்த இரத்ததான பணியானது தொடர்ந்து  கொள்ளப்பட வேண்டும் இதற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையில் எங்களுடைய அலுவலகங்கள் தொடர்ச்சியாக தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள் என கூறி வைக்க விரும்புகின்றேன்.- என்றார்.


அரச ஊழியர்கள் சமூகத்திற்கு எதையாவது செய்யுங்கள் யாழ்.அரச அதிபர் அட்வைஸ் samugammedia அரச சேவையில் இணைந்துள்ள அரச உத்தியோகத்தர்கள் எதையாவது இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற மனப்பாங்யோடு இருக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரச அதிபர் ஆ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.இன்று யாழ்ப்பாண தாதியர் பயிற்சி  கல்லூரியில் இடம்பெற்ற குருதி  கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.அரச சேவையில் இணைந்துள்ள அரச உத்தியோகத்தர்கள் எதையாவது இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற மனப்பாங்யோடு இருக்க வேண்டும்.இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அந்த மனப்பாங்கு குருதிக்கொடை வழங்குவதிலும் காணப்பட வேண்டும்.ஏற்கனவே நான் கடமையாற்றிய திணைக்களங்கள் மற்றும் காரியாலயங்களில் அந்தந்த நலன்புரி அமைப்புகளில் ஊடாக இரத்ததான முகாம்களை கட்டாயமாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தி அந்த நடவடிக்கைக்கு  அவர்களை உள்வாங்கும் நடவடிக்கையினை  மேற்கொண்டிருந்தேன். தற்பொழுது நான் அரச அதிபராக பதவி ஏற்றபின் சகல பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அந்தந்த பிரிவுகளில் இரத்ததான முகாம்களை நடாத்தி, இரத்ததான முகாம்களை செயற்படுத்த வேண்டும் என்று கோரி இருக்கின்றேன்.இந்த இரத்ததான பணியானது தொடர்ந்து  கொள்ளப்பட வேண்டும் இதற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையில் எங்களுடைய அலுவலகங்கள் தொடர்ச்சியாக தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள் என கூறி வைக்க விரும்புகின்றேன்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement