ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை தலைமை தாங்கி பெரிய கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியை உடைக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இல்லை என்றும் மேலும் சிலரை அழைத்து வர விரும்புவதாகவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இருப்பினும் அதனை செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதாகவும் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.