• May 05 2024

கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர்! samugammedia

Chithra / Aug 1st 2023, 8:59 pm
image

Advertisement

கனடா வாழ் ஈழத் தமிழரும் கலைஞரும் தொழிலதிபருமான ரஜீவ் சுப்பிரமணியம் தயாரிப்பில் தமிழகத்தில் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' 'Finder' ' திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் நேற்று முன்தினம் நாடுதிரும்பினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து தனது இசைத்துறை நண்பர்களோடு சென்னை சென்றிருந்த அவர் யாழ்ப்பாணத்தில் வரவேற்கப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பாக கனடா ஆரபி படைப்பகத்தினர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்

''தென்னிந்தியாவில் எமது ஆரபி படைப்பகத்தின் தயாரிப்பில் உருவாகி வருகின்ற 'Finder' 'திரைப்படத்தின் பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் உருவாகியிருக்கும் நிலையில் எமது நிறுவனத்தலைவர் ரஜீவ் சுப்பிரமணியத்தின் எண்ணத்திலும் சிந்தனையிலும் நம்மண்ணின் மூன்று சொல்லிசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் மகிழ்ச்சிகரமான செய்தியை நேற்று அறிவிப்புச் செய்திருந்தோம்.

இன்று மற்றுமொரு அறிமுகமாக இசையின் நுணுக்கங்களை படிப்படியாக கற்றுக்கொண்டு பலநூறு பாடல்களை ஒலிப்பதிவில் பாடியும் இசையமைத்தும் வருகின்ற நம்மண்ணின் பாடகர் வெற்றி சிந்துஜன் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளிலான பாடலை பாடி தென்னிந்திய திரைத்துறைக்குள் பாடகராக அறிமுகமாகின்றார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை பகிர்ந்துகொள்வதில் நாம் பெருமை கொள்கின்றோம்.

இங்கே காணப்படும் படங்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் எடுக்கப்பட்டவையாகும்.

படங்களில் பாடகர் சிந்துஜனை கவிப்பேரரசு வைரமுத்து கௌரவிப்பதையும் கனடா வாழ் ஈழத் தமிழரும் கலைஞரும் தொழிலதிபருமான ரஜீவ் சுப்பிரமணியம்  திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் கவிப்பேரரசு அவர்களைக் கௌரவிப்பதையும் காணலாம்.- என்றுள்ளது.


கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் samugammedia கனடா வாழ் ஈழத் தமிழரும் கலைஞரும் தொழிலதிபருமான ரஜீவ் சுப்பிரமணியம் தயாரிப்பில் தமிழகத்தில் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' 'Finder' ' திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் நேற்று முன்தினம் நாடுதிரும்பினார்.யாழ்ப்பாணத்திலிருந்து தனது இசைத்துறை நண்பர்களோடு சென்னை சென்றிருந்த அவர் யாழ்ப்பாணத்தில் வரவேற்கப்பட்டார்.இந்த விடயம் தொடர்பாக கனடா ஆரபி படைப்பகத்தினர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்''தென்னிந்தியாவில் எமது ஆரபி படைப்பகத்தின் தயாரிப்பில் உருவாகி வருகின்ற 'Finder' 'திரைப்படத்தின் பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் உருவாகியிருக்கும் நிலையில் எமது நிறுவனத்தலைவர் ரஜீவ் சுப்பிரமணியத்தின் எண்ணத்திலும் சிந்தனையிலும் நம்மண்ணின் மூன்று சொல்லிசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் மகிழ்ச்சிகரமான செய்தியை நேற்று அறிவிப்புச் செய்திருந்தோம்.இன்று மற்றுமொரு அறிமுகமாக இசையின் நுணுக்கங்களை படிப்படியாக கற்றுக்கொண்டு பலநூறு பாடல்களை ஒலிப்பதிவில் பாடியும் இசையமைத்தும் வருகின்ற நம்மண்ணின் பாடகர் வெற்றி சிந்துஜன் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளிலான பாடலை பாடி தென்னிந்திய திரைத்துறைக்குள் பாடகராக அறிமுகமாகின்றார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை பகிர்ந்துகொள்வதில் நாம் பெருமை கொள்கின்றோம்.இங்கே காணப்படும் படங்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் எடுக்கப்பட்டவையாகும்.படங்களில் பாடகர் சிந்துஜனை கவிப்பேரரசு வைரமுத்து கௌரவிப்பதையும் கனடா வாழ் ஈழத் தமிழரும் கலைஞரும் தொழிலதிபருமான ரஜீவ் சுப்பிரமணியம்  திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் கவிப்பேரரசு அவர்களைக் கௌரவிப்பதையும் காணலாம்.- என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement