மாத்தளை, எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட ரத்வத்த கீழ்பிரிவு தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளரை உடன் விலக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இது தொடர்பான மனோவின் முகநூல் பதிவு வருமாறு,
“எமது பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம். முதலில் அந்த காடையனை தோட்ட நிர்வாகத்தை விட்டு விலக்குங்கள்” என சற்றுமுன் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவை அழைத்து கத்தினேன்.” – என்றுள்ளது.