• May 10 2024

திருமலையில் பற்றி எரிந்த வைத்தியசாலை: கிழக்கு மாகாண ஆளுநரின் உடனடி உத்தரவு samugammedia

Chithra / Oct 1st 2023, 11:51 am
image

Advertisement

 

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உடனடியாக கள நிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு  கிழக்கு மாகாண ஆளுநர் செய்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். 

இன்று காலை குறித்த வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகள் சேதமடைந்துள்ளன. 

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண பணிப்பாளர் ஆகியோரை உடனடியாக சென்று களநிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

திருமலையில் பற்றி எரிந்த வைத்தியசாலை: கிழக்கு மாகாண ஆளுநரின் உடனடி உத்தரவு samugammedia  திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உடனடியாக கள நிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு  கிழக்கு மாகாண ஆளுநர் செய்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். இன்று காலை குறித்த வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண பணிப்பாளர் ஆகியோரை உடனடியாக சென்று களநிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.மேலும் தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement