அம்பாறை மாவட்டம் சம்மாந்துறைபகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்துள்ளது.
சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரி வீதியில் கட்டாக்காலிகளாக திரிந்த இரு மாடுகளே மோதுண்டு உயிரிழந்துள்ளது.
குறித்த விபத்து இரவு இடம்பெற்றுள்ளதுடன், விடயம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் மற்றும் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சம்மாந்துறை பகுதி வீதிகளில் கட்டாக்காலி மாடுகள், ஆடுகள், நாய்கள் அதிகளவாக உலாவி திரிவதாக பொதுமக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.
அத்துடன் திண்மக்கழிவுகள் உரிய முறையில் அகற்றாமையினால் கட்டாக்காலிகளின் தொல்லை தினமும் இப்பகுதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்மாந்துறையில் அதிகரித்த கட்டாக்காலிகளின் தொல்லை; வீதி விபத்தில் இரு மாடுகள் உயிரிழப்பு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறைபகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்துள்ளது. சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரி வீதியில் கட்டாக்காலிகளாக திரிந்த இரு மாடுகளே மோதுண்டு உயிரிழந்துள்ளது.குறித்த விபத்து இரவு இடம்பெற்றுள்ளதுடன், விடயம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் மற்றும் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் சம்மாந்துறை பகுதி வீதிகளில் கட்டாக்காலி மாடுகள், ஆடுகள், நாய்கள் அதிகளவாக உலாவி திரிவதாக பொதுமக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.அத்துடன் திண்மக்கழிவுகள் உரிய முறையில் அகற்றாமையினால் கட்டாக்காலிகளின் தொல்லை தினமும் இப்பகுதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.