வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.சமன் தர்மசிறி பத்திரன, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று (24) சந்தித்து கலந்துரையாடினார்.
இன்று(24) தமது கடமைகளை பொறுப்பேற்ற புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆளுநர் செயலகத்திற்கு வருகைதந்து ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார்.
புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வரவேற்ற ஆளுநர், கடமைகளை சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அத்துடன் நோயாளர்களின் உரிமைகள் தொடர்பில் அதிக கரிசனை காட்டப்பட வேண்டும் என தெரிவித்த ஆளுநர், இந்த விடயம் தொடர்பில் சுகாதார துறையினர் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் மாகாணத்திலுள்ள ஆரம்ப சுகாதார சேவை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு, ஆளுநர் ஆலோசனைகளை வழங்கினார்.
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்- ஆளுநர் சந்திப்பு. வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.சமன் தர்மசிறி பத்திரன, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று (24) சந்தித்து கலந்துரையாடினார். இன்று(24) தமது கடமைகளை பொறுப்பேற்ற புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆளுநர் செயலகத்திற்கு வருகைதந்து ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார்.புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வரவேற்ற ஆளுநர், கடமைகளை சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.அத்துடன் நோயாளர்களின் உரிமைகள் தொடர்பில் அதிக கரிசனை காட்டப்பட வேண்டும் என தெரிவித்த ஆளுநர், இந்த விடயம் தொடர்பில் சுகாதார துறையினர் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.மேலும் மாகாணத்திலுள்ள ஆரம்ப சுகாதார சேவை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு, ஆளுநர் ஆலோசனைகளை வழங்கினார்.