பாராளுமன்ற வளாகத்தில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பில் குறிப்பிடப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார மற்றும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் அனைவரும், விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன் அழைக்கப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் குழு அவர்களை 6ஆம் திகதி காலை 10.00 மணிக்கு அழைக்க, இன்று தீர்மானித்தது.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் ஆராய சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் முதன்முறையாக இன்று கூடியது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையிலான இந்தக் குழுவில் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த குழுவிற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்குவது என தீர்மானிக்கப்பட்டது.
இரண்டு பெண் எம்.பி.க்களையும் நியமனம் செய்யுமாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு அந்தக் குழு அறிவித்தது.
இந்தக் குழு எதிர்வரும் 6ஆம் திகதி கூடி விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் விசாரணை அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவம் - டயனா உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைப்புsamugammedia பாராளுமன்ற வளாகத்தில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பில் குறிப்பிடப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார மற்றும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் அனைவரும், விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன் அழைக்கப்படவுள்ளனர்.சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் குழு அவர்களை 6ஆம் திகதி காலை 10.00 மணிக்கு அழைக்க, இன்று தீர்மானித்தது. பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் ஆராய சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் முதன்முறையாக இன்று கூடியது.பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையிலான இந்தக் குழுவில் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.இந்த குழுவிற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்குவது என தீர்மானிக்கப்பட்டது. இரண்டு பெண் எம்.பி.க்களையும் நியமனம் செய்யுமாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு அந்தக் குழு அறிவித்தது.இந்தக் குழு எதிர்வரும் 6ஆம் திகதி கூடி விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் விசாரணை அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.