நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக ஒரு கிலோகிராம் தேசிக்காய் மூவாயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சில பகுதிகளில்தேசிக்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே கத்தரி, வெங்காயம் உள்ளிட்ட சில மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.