தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவிக்கையில்,
அவ்வாறான அச்சுறுத்தல் இருக்கலாம் என எனக்கு புலனாய்வு அறிக்கை கிடைத்துள்ளது.ஆனால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வருமென்று அறிந்தே இந்த பொறுப்பை ஏற்றேன்.
இப்போது நான் இங்கு இருக்கும்போதே போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக செயற்பாடுகளை ஒழிக்க வேண்டும்.
நமது பாதுகாப்பிற்கு நாம் தெரிந்து பாடுபட வேண்டும்.அப்படி மிரட்டல்கள் இருந்தால் ஒரு அடி கூட பின்வாங்கமாட்டேன். அப்படி நடந்தால் ஒரு அடி கூட பின்வாங்காமல் இன்னொரு அடி முன்னே வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
உயிருக்கு அச்சுறுத்தல். - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல் samugammedia தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவிக்கையில், அவ்வாறான அச்சுறுத்தல் இருக்கலாம் என எனக்கு புலனாய்வு அறிக்கை கிடைத்துள்ளது.ஆனால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வருமென்று அறிந்தே இந்த பொறுப்பை ஏற்றேன்.இப்போது நான் இங்கு இருக்கும்போதே போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக செயற்பாடுகளை ஒழிக்க வேண்டும்.நமது பாதுகாப்பிற்கு நாம் தெரிந்து பாடுபட வேண்டும்.அப்படி மிரட்டல்கள் இருந்தால் ஒரு அடி கூட பின்வாங்கமாட்டேன். அப்படி நடந்தால் ஒரு அடி கூட பின்வாங்காமல் இன்னொரு அடி முன்னே வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.