நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடுவதற்காக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், திருகோணமலை தொகுதிக்கான கட்டுப்பணம் இன்று (14) காலை செலுத்தப்பட்டது…
இதனை திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் செலுத்தினார். இவர்களுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.