• May 18 2024

மதில் இடிந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு – யாழில் சோகம்

Chithra / Dec 25th 2022, 11:59 am
image

Advertisement

யாழ்ப்பாணம் தும்பளை பகுதியில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தும்பளை செம்மண்பிட்டி பகுதியை சேர்ந்த விக்னராஜா கிருஷ்ணன் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

வீட்டின் மதில் ஏறி நின்ற போது, மதிலுடன் சேர்ந்து விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த குறித்த இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மதில் இடிந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு – யாழில் சோகம் யாழ்ப்பாணம் தும்பளை பகுதியில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தும்பளை செம்மண்பிட்டி பகுதியை சேர்ந்த விக்னராஜா கிருஷ்ணன் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.வீட்டின் மதில் ஏறி நின்ற போது, மதிலுடன் சேர்ந்து விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த குறித்த இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement