பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு எதிராகவும் கண்டன பேரணி இன்று(03) வெள்ளிக்கிழமை ஓட்டமாவடியில் இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்ய்யதுல் உலமா கல்குடா கிளையின் வழிகாட்டலில் கல்குடா முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஜிம்ஆ தொழுகையின் பின்னர் கண்டனப் பேரணியினை மேற்கொண்டனர்.
பிரதேசத்தின் நாலா பக்கமும் இருந்து பெருமளவானோர் பங்கு கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி தாக்குதலை நிறுத்துமாறு கோரி ஊர்வலமாக ஓட்டமாவடி மணிக் கூட்டு சந்தியில் ஒன்றுகூடி அங்கு கோஷங்களை எழுப்பியதுடன் பல்வேறு கோரிக்கை அடங்கிய மகஜரும் வாசிக்கப்பட்டது.