இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இங்கு வாழமுடியாத நிலையில் மேலும் எட்டு தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளக தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கையில் இருந்து படகு மூலம் புறப்பட்ட எண்மர் இன்று காலை தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவ்வாறு தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இலங்கை தமிழர்கள் தஞ்சமடைந்துள்ள தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் பின் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஆண் ஒருவர், பெண்கள் இருவர் மற்றும் ஐந்து சிறுவர்கள் என எட்டு பேர் இவ்வாறு இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்த மேலும் எட்டு இலங்கை தமிழர்கள் samugammedia இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இங்கு வாழமுடியாத நிலையில் மேலும் எட்டு தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளக தஞ்சமடைந்துள்ளனர்.இலங்கையில் இருந்து படகு மூலம் புறப்பட்ட எண்மர் இன்று காலை தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.இவ்வாறு தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இலங்கை தமிழர்கள் தஞ்சமடைந்துள்ள தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணையின் பின் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.ஆண் ஒருவர், பெண்கள் இருவர் மற்றும் ஐந்து சிறுவர்கள் என எட்டு பேர் இவ்வாறு இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.