கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கள்ளக்காதலை கண்டித்த மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் ஆகியோரை கள்ள காதலனுடன் இணைந்து விஷம் வைத்து கொலை செய்த மருமகள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் வேல்முருகனும், கீதாவும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் பிறந்துள்ளனர். இதனால் குடும்பத்தை காப்பாற்றும் நோக்கில் வேல்முருகன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய , கீதா, ஹரிஹரன் (44) என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளதுடன் அவ்வப்போது தனிமையிலும் இருந்து வந்துள்ளனர்.
இந்த தகவல் மாமனார் மற்றும் மாமியாருக்கு தெரிய வந்த நிலையில், இருவரும் சேர்ந்து மருமகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கீதா, கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி அன்று முள்ளங்கி சாம்பாரில் எலி பேஸ்ட்டையும் கலந்து வைத்துள்ளார்.
இதனை அறியாத மாமா, மாமி தமது வீட்டுக்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுவனுக்கும் உணவுண்ண கொடுத்துள்ளனர். அதனை உண்ட மூவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக சந்தேகமடைந்த வேல்முருகன் பொலிசாரிடம் புகார் கொடுத்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்ததுள்ளது.
இந்த நிலையிலே இது தொடர்பாக கீதாவையும் அவரது கள்ளக்காதலன் ஹரிஹரனையும் போலீஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
கள்ளக்காதலை கண்டித்த மாமனார், மாமியார் - சாம்பாரில் விஷம் கலந்த மருமகள் samugammedia கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கள்ளக்காதலை கண்டித்த மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் ஆகியோரை கள்ள காதலனுடன் இணைந்து விஷம் வைத்து கொலை செய்த மருமகள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் வேல்முருகனும், கீதாவும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் பிறந்துள்ளனர். இதனால் குடும்பத்தை காப்பாற்றும் நோக்கில் வேல்முருகன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய , கீதா, ஹரிஹரன் (44) என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளதுடன் அவ்வப்போது தனிமையிலும் இருந்து வந்துள்ளனர். இந்த தகவல் மாமனார் மற்றும் மாமியாருக்கு தெரிய வந்த நிலையில், இருவரும் சேர்ந்து மருமகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கீதா, கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி அன்று முள்ளங்கி சாம்பாரில் எலி பேஸ்ட்டையும் கலந்து வைத்துள்ளார்.இதனை அறியாத மாமா, மாமி தமது வீட்டுக்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுவனுக்கும் உணவுண்ண கொடுத்துள்ளனர். அதனை உண்ட மூவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சந்தேகமடைந்த வேல்முருகன் பொலிசாரிடம் புகார் கொடுத்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்ததுள்ளது. இந்த நிலையிலே இது தொடர்பாக கீதாவையும் அவரது கள்ளக்காதலன் ஹரிஹரனையும் போலீஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.