திருமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்றையதினம்(24) இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி தனது துவிச்சக்கரவண்டியில் வீதியை கடக்க முற்பட்ட போது அவ் வீதியில் வேகமாக பயணித்த ஹயஸ் வாகனம் துவிச்சக்கரவண்டியை மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் கண்டியை சேர்ந்த 32 வயதுடைய வான் சாரதி திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த மாணவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருமலையில் கோரவிபத்து. பாடசாலை மாணவியை மோதித் தள்ளிய ஹயஸ் வாகனம். திருமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்றையதினம்(24) இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவி தனது துவிச்சக்கரவண்டியில் வீதியை கடக்க முற்பட்ட போது அவ் வீதியில் வேகமாக பயணித்த ஹயஸ் வாகனம் துவிச்சக்கரவண்டியை மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து தொடர்பில் கண்டியை சேர்ந்த 32 வயதுடைய வான் சாரதி திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த மாணவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.