நாட்டில் தற்போது நிலவும் வெப்பநிலையுடன் கூடிய வானிலை காரணமாக பல்வேறு நீர் தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக, மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 40 அடி குறைந்துள்ளது.
இதனால் 1969 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நீரில் மூழ்கிய அனைத்து வணக்க ஸ்தலங்கள் தற்போது மீண்டும் வெளியில் தெரிவதாகவும், குறிப்பாக சண்முக நாதர் ஆலயம், புத்தரின் சிலை, இஸ்லாமிய பள்ளியின் தூபி, கங்கேவத்தை நகரில் இருந்த சித்தி விநாயகர் ஆலயம், பௌத்த விகாரை பகுதியில் இருந்த அரச மரம் பகுதி,பழைய பாலங்கள் என்பனவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வரட்சியான காலம் தொடரும் பட்சத்தில் மலையக பகுதிகளில் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம். மலையகத்தில் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவு. நாட்டில் தற்போது நிலவும் வெப்பநிலையுடன் கூடிய வானிலை காரணமாக பல்வேறு நீர் தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.குறிப்பாக, மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 40 அடி குறைந்துள்ளது.இதனால் 1969 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நீரில் மூழ்கிய அனைத்து வணக்க ஸ்தலங்கள் தற்போது மீண்டும் வெளியில் தெரிவதாகவும், குறிப்பாக சண்முக நாதர் ஆலயம், புத்தரின் சிலை, இஸ்லாமிய பள்ளியின் தூபி, கங்கேவத்தை நகரில் இருந்த சித்தி விநாயகர் ஆலயம், பௌத்த விகாரை பகுதியில் இருந்த அரச மரம் பகுதி,பழைய பாலங்கள் என்பனவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்து வரட்சியான காலம் தொடரும் பட்சத்தில் மலையக பகுதிகளில் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.