• May 06 2024

வெளிநாடு செல்ல முற்பட்ட யாழ்பாண இளைஞனும் யுவதியும் விமான நிலையத்தில் கைது..! samugammedia

Chithra / Nov 10th 2023, 7:28 am
image

Advertisement


சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 வயதான இளைஞனும் 19 யுவதியும் நேற்றையதினம் காலை குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் துபாய் செல்வதற்காக நேற்று 01.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களின் ஆவணங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

குறித்த நபர்களின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்த அதிகாரிகள் பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு செல்வதற்காக 

போலியான தகவல்களுடன் இரண்டு போலி விசாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்ல முற்பட்ட யாழ்பாண இளைஞனும் யுவதியும் விமான நிலையத்தில் கைது. samugammedia சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.27 வயதான இளைஞனும் 19 யுவதியும் நேற்றையதினம் காலை குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் துபாய் செல்வதற்காக நேற்று 01.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.அவர்களின் ஆவணங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.குறித்த நபர்களின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்த அதிகாரிகள் பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு செல்வதற்காக போலியான தகவல்களுடன் இரண்டு போலி விசாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement