இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறி உள்ளனர்.
லேடி சூப்பர்ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இந்த ஆண்டு பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களை திகிலடையச் செய்து வருகிறது.
கடந்த 7 ஆண்டுகளாக தனது காதலர் மற்றும் கணவர் விக்னேஷ் சிவன் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா இந்த ஆண்டு இன்னும் ஸ்பெஷலாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை பிரபலங்கள் சூழ மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு தனியார் சொகுசு ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. அடுத்த 4 மாதத்தில் நடிகை நயன்தாரா வாடகைத் தாய் முறைப்படி இரு ஆண் குழந்தைகளுக்கு அம்மாவானார். அந்த குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயர் வைத்துள்ளனர்.
இதுவரை விக்னேஷ் சிவன் உடன் ரொமாண்டிக் கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த நயன்தாரா இந்த முறை தனது இரு குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
அவர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான கனெக்ட் படத்தின் ரிலீஸை முன்னிட்டு கருத்து தெரிவித்த நயன்தாரா தன்னுடைய வாழ்க்கை பற்றி ஏகப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.