தன்னை விமர்சித்த மாளவிகா மோகனனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நயன்தாரா.
நயன்தாரா தான் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்து வருகிறார். ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமின்றி women centric படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
தற்போது அவரது கனெக்ட் படம் ரிலீஸ் ஆவதால் அதை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஒரு பேட்டி ஒன்றை நயன்தாரா கொடுத்து இருக்கிறார்.
அந்த பேட்டியில் ஹீரோயின்களுக்கும் ஹீரோக்கள் அளவுக்கு மரியாதை தரப்பட வேண்டும் என கேட்டிருக்கிறார்.
பட விழாக்களுக்கு சென்றால் கூட ஹீரோ தான் முன்னிலைப் படுத்தப்படுவார், என்னை ஓரமாக நிற்க வைத்து விடுவார்கள், அதனால் தான் நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என தெரிவித்து இருக்கிறார்.
மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாராவை தாக்கி பேசி இருப்பார். "ஒரு ஹாஸ்பிடல் சீனில் ஹீரோயின் முழு மேக்கப் உடன், முடி கூட களையாமல் இருப்பார்" என நயன்தாரா பெயரை குறிப்பிடாமல் மாளவிகா தாக்கி பேசி இருந்தார்.
அந்த விஷயம் பற்றி தற்போது பேட்டியில் பதிலடி கொடுத்த நயன்தாரா, "அதுக்காக முடியை விரிச்சு போட்டுட்டா உட்கார்ந்து இருக்க முடியும். ரியலிஸ்டிக் படங்களுக்கும் கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
"சோகமாக இருக்க கூடாது என இயக்குனர் கூறினார். அவர்களுக்கு தேவையான விதத்தில் தான் நடிக்க சொல்வார்கள். அது போல தான் நடித்தேன்" என நயன்தாரா பதிலடி கொடுத்து இருக்கிறார்.
மாளவிகா மோகனனுக்கு ஓப்பனாக பதிலடி கொடுத்த நயன்தாரா. தன்னை விமர்சித்த மாளவிகா மோகனனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நயன்தாரா.நயன்தாரா தான் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்து வருகிறார். ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமின்றி women centric படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது அவரது கனெக்ட் படம் ரிலீஸ் ஆவதால் அதை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஒரு பேட்டி ஒன்றை நயன்தாரா கொடுத்து இருக்கிறார்.அந்த பேட்டியில் ஹீரோயின்களுக்கும் ஹீரோக்கள் அளவுக்கு மரியாதை தரப்பட வேண்டும் என கேட்டிருக்கிறார். பட விழாக்களுக்கு சென்றால் கூட ஹீரோ தான் முன்னிலைப் படுத்தப்படுவார், என்னை ஓரமாக நிற்க வைத்து விடுவார்கள், அதனால் தான் நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என தெரிவித்து இருக்கிறார்.மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாராவை தாக்கி பேசி இருப்பார். "ஒரு ஹாஸ்பிடல் சீனில் ஹீரோயின் முழு மேக்கப் உடன், முடி கூட களையாமல் இருப்பார்" என நயன்தாரா பெயரை குறிப்பிடாமல் மாளவிகா தாக்கி பேசி இருந்தார்.அந்த விஷயம் பற்றி தற்போது பேட்டியில் பதிலடி கொடுத்த நயன்தாரா, "அதுக்காக முடியை விரிச்சு போட்டுட்டா உட்கார்ந்து இருக்க முடியும். ரியலிஸ்டிக் படங்களுக்கும் கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது."சோகமாக இருக்க கூடாது என இயக்குனர் கூறினார். அவர்களுக்கு தேவையான விதத்தில் தான் நடிக்க சொல்வார்கள். அது போல தான் நடித்தேன்" என நயன்தாரா பதிலடி கொடுத்து இருக்கிறார்.