பொறுப்புகளில் இருந்து தப்பிச் செல்வதற்குப் பதிலாக சவால்களுக்கு முகம் கொடுப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பொறுப்பிலிருந்து நாங்கள் ஓடமாட்டோம் என்று நான் உறுதியளிக்கிறேன். அப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால் நாங்கள் சவால்களை எதிர்கொண்டு இந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.
தமக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் எதிர்கொள்ளத் தயார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமது கட்சி கலந்துரையாட ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்திருந்தார்.
நாங்கள் இந்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம், இந்த விஷயத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.